2 லட்சம் கொரோனா பரிசோதனை: மத்திய அரசு தகவல்

புதுடில்லி:


நேற்று(ஏப்.,12) வரை இந்தியாவில், 2,06,212 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேத்கர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை கருவிகள், நாளை மறுநாள் இந்தியா வரும். நேற்று வரை 2,06,212 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனைகளை நாம் மேற்கொள்ளும் வேகம் குறித்து கவலை தேவையில்லை. அடுத்த 6 வாரங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு தேவையான கருவிகள் நம்மிடம் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.